சவரன் பவன் எனும் இந்த புராதன மடாலயமானது, கேரள கிறித்துவ மரபில் கீர்த்தியுடன் விளங்கிய ‘குரியாகோஸ் எலியாஸ் சவரா’ எனும் மதகுரு வசித்த இடமாகும். சைரோ மலபார் கத்தோலிக்க தேவாலயத்தின் முதல் சபையை கூட்டியவர் இந்த ‘குரியாகோஸ் எலியாஸ் சவரா’ ஆவார். அவர் வசித்த இல்லமே தற்போதுள்ள இந்த சவரன் பவன் எனும் புனித மடமாக பிரசித்தி பெற்றுள்ளது.
மூன்று நூற்றாண்டுகள் பழமையைக்கொண்ட இந்த கிறித்துவ ஸ்தலம் பக்தர்கள் மத்தியில் ஒரு ஆன்மிக முக்கியத்துவம் கொண்ட அம்சமாக பூஜிக்கப்படுகிறது. ‘ஆலெப்பி’யிலிருந்து 6 கி.மீ தூரத்திலுள்ள இந்த சவரன் பவன் மடாலயத்திற்கு படகுப்போக்குவரத்து மூலமாக மட்டுமே செல்ல முடியும்.
விவரிக்க முடியாத அமைதியுடனும் ஆன்மீகப்பிரகாசத்துடனும் இந்த ஸ்தலம் வீற்றுள்ளதை பயணிகளும் பக்தர்களும் உணர்வுப்பூர்வமாக அனுபவிக்கலாம். பெரும் யாத்ரீக குழுவாகவோ, சிறு குழுவாகவோ ஒரு அமைதியான ஆன்மீக சூழலை நாடிச்செல்வதற்கு இந்த ஸ்தலம் மிகவும் ஏற்றதாகும்.