பாதாமியின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னமான இந்த கோட்டை குகைக்கோயில்களுக்கு நேர் எதிரில் மலை உச்சியில் அமைந்துள்ளது. இது பிரதான நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் பூதநாத் கோயிலுக்கு கிழக்கில் அமைந்துள்ளது.
இந்த கோட்டை அக்காலத்திய சாளுக்கிய மன்னர்கள் வசித்த அரண்மனை என்பது குறிப்பிடத்தக்கது. கால்நடையாக மட்டுமே சென்றடையக்கூடிய இந்தக் கோட்டையில் விஷ்ணுக்கடவுளை வணங்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியால் இரண்டு சிவாலயங்கள் 5ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளன.
இந்த இரண்டு சிவாலயங்களில் மேற்புறத்தில் உள்ளது சிவபெருமானுக்கும் கீழ்ப்புறத்தில் உள்ளது கணேசக்கடவுளுக்கும் உருவாக்கப்பட்டுள்ளது.
பயணிகள் மேல்தளக்கோயிலில் புராணங்களில் இடம்பெற்றுள்ள யானை, சிங்கம் போன்ற மிருக சிற்பங்களைக் காணலாம். கீழ்த்தளக் கோயிலின் வடபகுதியில் திப்பு சுல்தான் 16ம் நூற்றாண்டில் பயன்படுத்திய பீரங்கி ஒன்று 14 ம் நூற்றாண்டைச்சேர்ந்த காவல் கோபுரம் அருகில் காணப்படுகிறது.
இவை தவிர இந்தக் கோட்டையில் பயணிகளைக் கவரும் அம்சங்களாக கற்களால் எழுப்பப்பட்டுள்ள பெரிய உணவுத்தானிய கிடங்குகள், ஒரு ரகசியக்கூடம், பாதுகாப்பு கோட்டைச்சுவர்கள் மற்றும் ஒரு ரகசிய சுரங்க அறை போன்றவை அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications