பரத்பூர் அரண்மனை ராஜ்புட் மற்றும் முகாலய கட்டிடக் கலைகளின் கலவையில் உருவான அற்புத படைப்பாகும். இந்த அரண்மனையின் நீதிமண்டப தளப் பரப்பு நுண்ணிய வேலைப்பாடுகளை கொண்ட ஓடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அரண்மனையின் மையப்பகுதி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கிறது. இதில் 2-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சில பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. அதோடு இந்த அருங்காட்சியகம் பரத்பூரின் கலாச்சாரத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.