பட்கல் நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்குள்ள பிரதான அம்சமான கடற்கரைப்பகுதிக்கு மறக்காமல் விஜயம் செய்வது அவசியமாகும். அரபிக்கடலை ஒட்டியுள்ள இந்த கடற்கரை மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் தென்னை மரங்களின் பின்னணியில் அழகாக காட்சியளிக்கின்றது.
16ம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியின் போது இது ஒரு முக்கியமான துறைமுகமாக விளங்கியுள்ளது. கடற்கரை அருகிலேயே உள்ள முருடேஷ்வரா கோட்டை மற்றும் இங்குள்ள விஜயநகர கோயில், ஜெயின் சந்திரநாத் கோயில் போன்றவையும் பயணிகள் விஜயம் செய்யவேண்டிய சுற்றுலா அம்சங்களாகும்.
மேலும் அருகாமையிலுள்ள கண்டுக கிரி எனும் மலைக்குன்றில் பல புராதனமான கோயில்களும் அமைந்துள்ளன. இந்த கடற்கரையில் அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கத்திலிருந்து சுற்றியுள்ள பகுதிகளின் அழகை பார்த்து ரசிக்கலாம்.
ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை உள்ள இடைப்பட்ட காலம் இந்த கடற்கரைப்பகுதியை ரசிப்பற்கு ஏற்ற காலம் ஆகும்.