வெங்கடபூர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த கடவினகட்டா அணை பட்கல் நகரத்தின் நீராதாரமாக விளங்குகிறது. மழைக்காலத்தின் மழை இங்கு சேகரமாகி வருடம் முழுமைக்குமான நீர்த்தேவையை பூர்த்தி செய்யும்படி இந்த அணையில் சேகரிக்கப்படுகிறது.
பட்கல் நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் நேரம் இருப்பின் இந்த அணையை சென்று பார்க்கலாம். இருப்பினும் இங்கு குளியல் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது ஆபத்தானதாகும்.