சந்திபூரில் இருந்து 206 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பீடர்கனிகா, பிராமணி, பைடரணி மற்றும் டம்ரா நதிகளின் டெல்டா பகுதியில் உள்ளது. அருமையான வனவிலங்குகள் மற்றும் பசுமையான காடை கொண்டுள்ளதால் பீடர்கனிகாவை சுற்றிப் பார்க்க கோடைக்காலத்திலும் குளிர் காலத்திலும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு.
இங்கு நுழைய பீடர்கனிகாவின் காட்டிலாக்க அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். இந்த இடத்தை அடைய கோலாவில் இருந்து தங்மலுக்கு படகு மூலமாக மட்டுமே வர முடியும். இது இந்தியாவிலுள்ள இரண்டாவது பெரிய சதுப்பு நிலக்காடாக விளங்குவதால் படகு பயணம் சுவாரசியமாக இருக்கும்.
பீடர்கனிகாவில் ஒரு தேசிய பூங்காவும், அதனுள் ஒரு வனவிலங்கு சரணாலயமும் உள்ளது. இங்குள்ள கஹிரா மாதா கடற்கரை இந்த காட்டையும் வங்காள வரிகுடாவையும் பிரிக்கிறது.
வளமையான தாவர வர்க்கம் மற்றும் விலங்கினங்களை கொண்டுள்ளதால் பீடர்கனிகாவில் பல அறிய வகை மிருகங்களையும் தாவரங்களையும் காணலாம்.
வெண்ணிற முதலைகள், உப்புநீர் முதலைகள், காட்டு பல்லிகள், மலை பாம்புகள், ராஜ நாகங்கள், நெடுங்கிளாத்திகள் என பல மிருகங்களை இங்கே கண்டு ரசிக்கலாம். மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பிய கண்டத்திலிருந்து இடம்பெயர்கின்ற பறவைகளும் இங்கே வருவதால் இது கூடுதல் ஈர்ப்பாக அமைகிறது.