சந்திபூர் சுற்றலாத் தலங்களில் முதன்மையான ஈர்ப்பாக விளங்குகிறந்து சந்திபூர் கடற்கரை. இந்த அதிசய கடற்கரை இயற்கை அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு ஒரு நேரத்தில் உள்வாங்கும் கடல், அடுத்த நொடியே உள்வாங்கிய இடத்தை தண்ணீரால் நிரப்பும்.
இதை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அலைகளின் வேகம் குறிப்பிட்ட இடைவேளையில் அதிகமாகவும் குறைவாகவும் மாறுவதால் ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த அதிசயத்தை இங்கே காணலாம்.
அலைகளின் அளவு குறைவாக இருக்கும் போது கடல் உள்வாங்கும். அலைகளின் அளவு அதிகரிக்கும் போது உள்வாங்கிய இடம் நீரால் மூடப்படும்.
கடற்கரையை சுற்றியுள்ள மணற்திட்டுக்களும் சவுக்க மரங்களும் இந்த கடற்கரைக்கு கூடுதல் அழகை சேர்க்கும். இந்த கடற்கரையில் சிகப்பு நிற நண்டுகளும் ஹார்ஸ் ஷூ நண்டுகளும் அதிகமாக வாழ்கின்றன.