மஹா சதி எனப்படும் இந்த ஸ்தலம் உதய்பூர் மன்னர்கள் தகனம் செய்யப்பட்ட இடமாகும். இங்கு கங்கோத்பாவா குண்ட் எனும் இயற்கை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. மக்கள் நம்பிக்கைகளின்படி இது கங்கை ஆற்றின் துணை ஆறு ஒன்றினால் உருவானதாக சொல்லப்படுகிறது.
அஹார் என்ற பெயரைக்கொண்ட இந்த பாதாள நீரோடை நிலத்துக்கு அடியிலிருந்து வெளிப்பட்டு ஒரு நீர்த்தேக்கமாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே கங்கை நீரின் புனித குணம் இந்த நீர்த்தேக்கத்துக்கும் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். இந்த ஏரிக்கருகிலேயே ஒரு சிவன் கோயிலும் உள்ளது.



Click it and Unblock the Notifications