கோவை குற்றாலம் கோயம்புத்தூர் அருகிலுள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் ஆகும். பல அடுக்குகள் கொண்ட நீர்வீழ்ச்சியின் ரம்மியமான தோற்றம் இங்கு காணக் கிடைப்பதால் இது புகழ் பெறுகிறது.
இந்த அருவி சிறுவாணி ஆற்றிலிருந்து பிறக்கிறது. இந்த சிகரம் கோயம்புத்தூரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பகுதியாக உள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 35 கி.மீ. தொலைவில் எளிதில் அடையக்கூடிய இடமாக கோவை குற்றாலம் அமைந்துள்ளது.
புகழ்பெற்ற சிறுவாணி அணை இந்த நீர்வீழ்ச்சிக்கு மேல் தான் கட்டப் பட்டுள்ளது. இந்த அணை மற்றும் அதைச் சுற்றியுள்ள நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களின் நிர்வாகத்திற்கு வனத்துறையே பொறுப்பு.
கோவை குற்றாலத்தைக் காண வனத்துறையின் சிறப்பு அனுமதி பெற்ற பிறகே செல்ல முடியும். நகரிலிருந்து இங்கு வர குறிப்பிட எண்ணிக்கையிலான பேருந்துகளே உள்ளன. ஐந்து மணிக்கு மேல் இங்கு செல்ல யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் குறிப்பிட்ட சமயத்திற்கு முன்பாகவே இந்த இடத்தைப் பார்வையிட வேண்டும்.