செயின்ட் பாட்ரிக்ஸ் சர்ச், டல்ஹெளசி கன்டோன்மென்ட் பகுதியின் கீழ் வரும் இந்த சர்ச் 1909-ம் ஆண்டு பலூன் பால்ஸில் கட்டப்பட்டது. இந்த சர்ச் துவங்கப்படுவதற்கு ஆங்கிலேய ராணுவ வீரர்கள் பெரிதும் காரணமாக இருந்தார்கள்.
இந்த பகுதியின் மிகப்பெரிய தேவாலயமான இதன் முக்கிய ஹாலில், சுமார் 300 பேர் அமர முடியும். செயின்ட் பாட்ரிக்ஸ் சர்ச், ஜலந்தரில் உள்ள கத்தோலிக்க டையோசீஸ் மூலமாக நிர்வகிக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வருகிறது.
இங்கு நடைபெறும் வாராந்திர பிரார்த்தனைக்கு பெருமளவு எண்ணிக்கையிலான மக்கள் இங்கு கூடுவார்கள். டல்ஹெளசி பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தூரத்திலுள்ள இந்த இடத்தை பயணிகள் எளிதில் அடைந்து விட முடியும்.



Click it and Unblock the Notifications