தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் திமாபூர் பண்டையகால கச்சாரி வம்சத்தின் தலைநகர் என்று நிரூபித்திருக்கிறார்கள். பெருந்தூண் காலத்தில் முக்கியமான இடமாக திமாபூர் கருதப்படுகிறது.
அவ்வரசின் இடிபாடுகள் காணப்படும் இடம் கச்சாரி இடிபாடுகள் என வழங்கப்படுகிறது. மேலும் 13ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற அஹோம் படையெடுப்பு சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் இந்த இடுபாடுகளில் கிடைக்கின்றன.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை விளக்கும் வண்ணம் அமைந்திருக்கும் இவ்விடம் வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு பொக்கிஷமாக திகழ்கிறது.
இந்து மதப்பின்னணியில் இருந்தாலும் கச்சாரி மக்கள் ஆர்யர்கள் அல்லாதவர்கள் என்பதற்கு இவ்விடம் ஏராளமான சான்றுகளை கொண்டுள்ளது.
இவ்விடத்தில் அமைந்திருக்கும் பெருந்தூணு புகழ்பெற்று விளங்குகிறது.. அதுமட்டுமல்லாது கோவில்கள், தொட்டிகள் ஆகியவற்றின் இடிபாடுகளும் இங்கு இருக்கின்றன. பல வடிவங்களில் சிதறிக்கிடக்கும் கற்களும் இங்கு காணப்படுகின்றன. தற்சமயம் இப்பகுதி சிறப்பாக பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.