திமாபூருக்கு வெளியே அமைந்துள்ள செய்தெகிமா கிராமம் நகரின் மையப்பகுதியில் இருந்து ஒருமணி நேர தொலைவில் அமைந்துள்ளது. 280அடி உயரத்தில் இருந்து விழும் இந்நீர்வீழ்ச்சி பெயருக்கு ஏற்றார்ப்போல மூன்று அடுக்குகள் கொண்டதாக இருக்கிறது. சாகசப் பயணங்களில் விருப்பமுள்ளவர்கள் குளிர்காலங்களில் நீர் குறைவாக இருக்கும் சமயத்தில் மலையேற்றத்தில் ஈடுபடலாம்.
நாகாலாந்து சுற்றுலாத்துறை பயணிகளுக்கு தேவையான அத்தியாவசியத் தேவைகளைச் செய்துகொடுத்திருக்கிறது. குன்றின் உச்சி நோக்கி ஒஅயணித்தால் திமாபூர் நகரத்தை அடையலாம்.
விரைவில் இங்கு ஓய்விடம் ஒன்றும் கட்டப்பட உள்ளது. ஆனால் சரியில்லாத சாலைகளால் இவ்விடத்தை அடைய சிறிது கடினமாக இருந்தாலும் சாகசப் பிரியர்களுக்கு ஏற்ற இடமாக இருக்கிறது.