1961ல் சிங்ரிஜான் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ரங்கபஹர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தன் கத்தியை ஒரு கல்லில் தீட்டும்போது கல்லில் இருந்து ஒரு திரவம் வழிய, அதே இரவில் அவர் கனவில் சந்நியாசி உருவில் அடிக்க சிவபெருமான் வரவும் அதை ஊர்மக்களிடம் தெரிவித்தார் அவர்/
பூசாரி மற்றும் கற்றோர் துணையுடன் அவ்விடத்திற்கு சென்ற ஊர்மக்கள் அந்த கல் ஒரு சிவலிங்கம் என்பதை அறிந்துகொண்டனர். முதலில் சாய்வாகக் கிடந்த அந்தக் கல்லை பல வழிபாடுகளுக்குப் பிறகு நிமிர்த்தினர். அன்றிலிருந்து இவ்விடம் சிங்ரிஜானின் புகழ்பெற்ற வழிபாட்டுத்தளமாக விளங்குகிறது.