புவனேஷ்வர் ஸ்தலம் இங்கு ஒரு மலையுச்சியில் வீற்றிருக்கும் சிவன் கோயிலுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. இது துங்கர்பூர் நகரத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு பயணிகள் இயற்கையாகவே உருவான சிவலிங்கம் மற்றும் ஒரு புராதன மடாலயம் போன்றவற்றை பார்க்கலாம்.
ரங்கபஞ்சமி திருநாளின்போது இங்கு ஒரு வருடாந்திர திருவிழாவும் நடைபெறுகிறது. அச்சமயம் அற்புதமான ‘கைர்’ நடன நிகழ்ச்சிகளை பயணிகள் கண்டு களிக்கலாம். இந்த நடன நிகழ்ச்சியில் நீண்ட காலங்கிகளை அணிந்த ஆண்கள் இடமாகவும் வலமாகவும் வேகமாக சுற்றிச்சுற்றி ஆடுகின்றனர். பீல் பழங்குடி இனத்தாரின் நடன வடிவமான இது ஹோலி பண்டிகையின் போது விசேஷமாக ஆடப்படுவது குறிப்பிடத்தக்கது.