இரண்டாம் மஹரவால் உதய் சிங் மஹாராஜாவின் ராஜ வசிப்பிடமாக இந்த உதய் பிலாஸ் அரண்மனை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர் கலை மற்றும் கட்டிடக்கலை அம்சங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த மன்னராவார்.
நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட பலகணிகள், சிறுகூரை வேலைப்பாடு கொண்ட சாளரங்கள், தோரண விதான அமைப்புகள், தூண்கள் மற்றும் அலங்கார சட்டகங்கள் இந்த அரண்மனை முழுதும் நிரம்பி பயணிகளை வசீகரிக்கின்றன.
இந்த அற்புதமான அரண்மனை கைப் சாஹர் ஏரியின் கரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பரேவா மற்றும் பல்வாரியா எனப்படும் கற்கள் இந்த அரண்மனையின் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அரண்மனை வளாகம் மூன்று அங்கங்களாக பிரிக்கப்பட்டு ராணிவாஸ், உதய் பிலாஸ் மற்றும் கிருஷ்ண பிரகாஷ் அல்லது ஏக் தம்பியா மஹால் என்ற பெயர்களில் அவை அழைக்கப்படுகின்றன. தற்சமயம் இந்த அரண்மனை ராஜஸ்தான் மாநிலத்தின் புகழ்பெற்ற பாரம்பரிய விடுதிகளில் ஒன்றாக செயல்படுகிறது.