ஷேக் ஃபரித் என்றழைக்கப்படும் பாபா ஃபரித்தின் கல்லறையில் மார்பில் கற்களால் செய்யப்பட இரண்டு பெரிய கதவுகள் அமைந்திருக்கின்றன.
கிழக்கு திசையை நோக்கியுள்ள கதவு நூரி தர்வாசா அல்லது ஒளியின் கதவு என்று அழைக்கப்படுகிறது. வடக்கு திசையை நோக்கியுள்ள கதவை பஹிஷ்தி தர்வாசா அல்லது சொர்க்க வாசல் என்று அழைக்கிறார்கள்.
இந்த கல்லறைக்குள் இரண்டு மார்பில் குகைகள் காணப்படுகின்றன. அவை சட்டர் எனப்படும் துணிகளை வைத்து சூழப்பட்டிருக்கும். இது பாபா ஃபரித் மற்றும் அவரது மூத்த மகனின் கல்லறைகள் ஆகும்.
இங்கு வருபவர்கள் கல்லறைக்கு பூக்களை அஞ்சலியாக செலுத்தி விட்டு செல்வார்கள். ஆனால் பெண்கள் இதற்குள் செல்ல அனுமதி கொடுப்பதில்லை.



Click it and Unblock the Notifications