ஆம் காஸ் பாக் என்பது பாபரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஒரு ராஜபாட்டை சத்திரத்தின் மிச்சமாகும். பாபருக்கு பின்னர் ஷாஜ ஹான் மன்னரால் புதுப்பிக்கப்பட்ட இந்த மாளிகையில் பல மன்னர்கள் லாகூரை நோக்கிய பயணத்தின்போது தங்குவதற்காக பயன்படுத்தியுள்ளனர்.
இந்த வளாகத்தில் காணப்படும் சரத் கானா எனப்படும் காற்று குளிரூட்டும் அமைப்பு குறிப்பிடத்தக்க கட்டிடக்கலை அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.
ஷீஷ் மஹால் அல்லது தௌலத் கானா இ காஸ் எனப்படும் மற்றொரு அமைப்பில் அலங்கரிக்கப்பட்ட சுவர்கள், மினாரெட்டுகள், தடாகங்கள், நீருற்றுகள், மாடங்கள் மற்றும் வண்ண ஓடுகள் போன்றவை காணப்படுகின்றன.
ஒவ்வொரு வருடமும் ஷாஹீதி ஜோர் மேளா திருவிழாவின் போது இந்த ஸ்தலத்தில் டி டீவார் எனும் ஒலி ஒளி நாடகக்காட்சி நிகழ்த்தப்படுகிறது. சீக்கியர்களின் தியாக வரலாற்றை உணர்ச்சிபூர்வமாக சித்தரிக்கும் இந்த நிகழ்ச்சியை பயணிகள் பார்க்க முடிந்தால் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.