நாராயண கோயில் அல்லது பத்மப்பராசி பஸாதி என்று அழைக்கப்படும் இந்த ஜைன கோயில் 950 ம் ஆண்டு மூன்றாம் கிருஷ்ணா ஆட்சியின்போது கட்டபட்டுள்ளது. கங்கா பெர்மாடி புட்டாய்யா பகுதியை ஆண்ட ராணி பத்மப்பராசி இதைக்கட்டுவதற்கு உதவி செய்ததாகவும் அறியப்படுகிறது.
கர்நாடகாவின் பெரிய ராஷ்டரகூடக்கோயில்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. கடக் செல்லும் பயணிகள் கர்நாடகத்தின் பெரிய ராஷ்டிரகூட கோயில்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோயிலைப்பார்ப்பது அவசியம்.இந்த கோயிலில் கர்ப்பகிருகத்துக்கு மேலே திராவிட பாணியில் அமைந்துள்ள விமான கோபுரம் காணப்படுகிறது. இந்த கோபுரம் திரிகூட அம்சத்தை கொண்டுள்ளது. மூன்று கர்ப்பகிருஹங்களை கொண்டுள்ள இந்த கோயிலில் சதுர வடிவத்தில் அமைக்கப்பட்ட ஒன்று ஜைன பிரிவுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இதர இரு கர்ப்பகிருஹங்கள் செவ்வக வடிவில் சுவற்றை சுற்றிக்காணப்படும் செவ்வக பீட அமைப்பின்மீது அமைந்துள்ளன. இந்த இரு கர்ப்பகிருஹங்களுக்குள்ளே 24 துவாரங்களுடன் காணப்படுகின்றன.
24 தனித்தனியான தீர்த்தங்கர சிற்பங்களை ஸ்தாபிக்கும் நோக்கத்துடன் இந்த இரண்டு கர்ப்பக்கிருஹங்களும் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.