ரோப்வே எனப்படும் இந்த கயிற்றுக்கார் பாதை காங்க்டாக் பகுதியின் இயற்கை எழிலை நன்றாக பார்த்து ரசிக்க உதவும் முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றிருக்கிறது.
இந்த கயிற்றுக்கார் பயணிகள் நகரத்திற்கு மேலே அழைத்துச்செல்வேறு செல்கிறது. மூன்று வெவ்வேறு உயரங்களில் அமைக்கப்பட்டுள்ள தளங்களில் இது நின்று செல்கிறது.
தேவ்ராலி மார்க்கெட் பகுதியிலிருந்து இந்த கயிற்றுக்காரில் பயணிகள் ஏறிக்கொள்ளலாம். பெரியவர்களுக்கு 50 ரூபாயும் குழந்தைகளுக்கு 30 ரூபாயும் கட்டணமாக இதில் வசூலிக்கப்படுகிறது.