ராம பிரானின் காலம் வரை நீள்கிறது லோனியின் வரலாறு. லவனசூர் என்ற அசுரன் ஷத்ருகன் என்ற ராமரின் தம்பியால் இங்கு கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
மற்றொரு கதையின்படி லோன்கரன் என்ற மன்னனால் இவ்வூர் உருவாக்கப்பட்டதாகவும், அவர் இங்கே ஒரு கோட்டையும் கட்டியதாகவும் நம்பப்படுகிறது.. 1789ல் முகமது ஷா அக்கோட்டையை அழித்து அதன் செங்கல்களால் ஒரு தோட்டத்தையும், குளத்தையும் கட்டு வரை அக்கோட்டை இருந்தது.
பிரித்விராஜ் சவுஹானின் ராஜ்யத்தில் ஒன்றாக லோனி இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அவரால் கட்டப்பட்ட கோட்டையின் மிச்சங்களை இன்றும் காணலாம்.
கரஞ்சி பாக், உல்திபுர், ரனம் தோப்புகள் என்றழைக்கப்பட்ட முகலாயர் காலத்து தோப்புகள் இன்றும் புகழ்பெற்று விளங்குகின்றன.
கடைசி முகலாய மன்னரான பகதூர் ஷா ஜஃபார் என்பவரின் மனைவியான ஜினத் மஹாலால் நடப்பட்டவை முதல் இரண்டு தோப்புகள். ஆங்கிலேயெ அரசு இத்தோப்புகளைப் பிடுங்கி மீரத் நகரைச் சேர்ந்த ஷேக் இலாஹி பக்ஷ் என்பவருக்கு விற்றது.
உள்ளூர் மக்களால் அபதி பாக் ரணம் என்றழைக்கப்பட்ட மூன்றாவது தோப்பின் எல்லைச் சுவரை இன்றளவும் பார்க்க முடிகிறது.



Click it and Unblock the Notifications