இடங்குஞ்சி அல்லது இடகுஞ்சி என்று அழைக்கப்படும் இந்த ஆன்மீக ஸ்தலம் ஹிந்து யாத்ரீகர்களிடையே மிகப்பிரபலமாக உள்ளது. மடோபர் ஷீ விநாயக தேவரு என்றழைக்கப்படும் கணபதி கோயில் இந்த ஸ்தலத்தின் விசேஷமாகும்.
ஒரு கையில் மோதகத்துடனும் மறு கையில் தாமரையுடனும் காட்சியளிக்கும் கணபதி விக்கிரகம் இங்கு உள்ளது. இந்த கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கப்படுகிறது. ஆயிரக்கணக்கில் தொடர்ந்து வருகை தரும் பக்தர்களின் வேண்டுதல் இங்கு நிறைவேற்றப்படுவதாக ஐதீகம்.இடங்குஞ்சி கோயிலில் உள்ள கணபதி சிலை கோகர்ணாவில் உள்ள கணபதி சிலையைப்போன்றே காட்சி அளிக்கின்றது. ஓவ்வொரு வருடமும் 10 லட்சம் பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.
குஞ்சாரண்ய என்று அழைக்கப்பட்ட இந்த வனப்பகுதியில் கணபதிக்கடவுள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. பல ரிஷிகள் தவம் புரிந்த பகுதியாகவும் இது அறியப்படுகிறது.