கோகர்ணா பகுதியிலேயே பிரசித்தமான கடற்கரை இந்த ஓம் பீச் ஆகும். இங்கு பயணிகள் ஆன்மீகம், மகிழ்ச்சி, ஏகாந்தம் போன்ற எல்லா அம்சங்களையும் அனுபவிக்கலாம். ஓம் என்ற குறி (எழுத்து) வடிவில் இந்த கடற்கரை அமைந்துள்ளதால் இது ஓம் பீச் என்று அழைக்கப்படுகிறது.
பயணிகள் இங்கு நீர்ச்சறுக்கு, படகுப்பயணம் போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபட வசதி உண்டு. அனுபவம் மிக்க பயிற்சியாளர்கள் துணையோடு பயணிகள் இவற்றில் ஈடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறு தேநீர் உணவகங்கள் மற்றும் குடில்கள் கடற்கரையை ஒட்டியே அழகாக காணப்படுவது சூழலின் அழகை மேலும் கூட்டுவதாக உள்ளது. இவற்றில் உள்ளூர் உணவு வகைகளை பயணிகள் ருசிக்கலாம்.