குருவாயூரின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் இந்த பார்த்தசாரதி கோயிலும் ஒன்று. இங்கு கிருஷ்ண பஹவானின் மற்றொரு வடிவமான பார்த்தசாரதி குடி கொண்டுள்ளார். குருஷேத்திர யுத்தத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாகவும் வழிகாட்டியாகவும் உருவெடுத்த ஸ்ரீகிருஷ்ணரே பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார்.
இந்த கோயிலின் விக்கிரகம் ஸ்ரீ ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கோயிலில் ஆதி சங்கரருக்கும் ஒரு சிலை உள்ளது. மிக விசேஷமான அம்சமாக இக்கோயிலின் கருவறையானது ஒரு தேர் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
மிக நுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ள குதிரைகளையும் சக்கரங்களையும் இந்த அமைப்பில் பார்க்க முடியும். ஒட்டுமொத்தமான பார்த்தசாரதி கோயிலின் தோற்றமானது பிரமிக்க வைக்கும் கலையம்சத்துடன் பார்வையாளர்களை வசியப்படுத்தும் விதத்தில் வீற்றிருக்கிறது. இக்கோயிலின் சுவர்களிலும் நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் காட்சியளிக்கின்றன.