ஹம்பியிலுள்ள மற்றுமொரு புனித ஸ்தலங்களில் ஒன்று இந்த யந்த்ரோதாரகா ஆஞ்சநேயர் கோயில் ஆகும். ஹனுமான் என்றும் ஆஞ்சநேயர் என்றும் அழைக்கப்படும் கடவுளுக்காக இந்த கோயில் எழுப்பப் பட்டுள்ளது.
இந்த கோயில் கோதண்ட ராமர் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது. ஹனுமானின் விக்கிரகமானது இங்கு ஒரு யந்திரத்தில் பொதிக்கப்பட்டிருப்பது இந்த கோயிலின் பிரதான விசேஷமாகும். நெருங்கி உற்று பார்த்தால் இந்த யந்திரத்தின் மைய விக்கிரகத்தைச் சுற்றிலும் எண்ணற்ற வானரங்களின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
இது தவிர தியானத்தில் உட்கார்ந்த நிலையில் ஒரு ஹனுமான சிலையும் இந்த கோயிலில் உள்ளது. இது விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் எல்லா ஆலயங்களிலும் ஹனுமானின் சிலை சக்தியைக்காட்டும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளதே தவிர தியானத்தில் அமர்ந்துள்ளது போன்ற சிலை வேறெங்கும் இல்லை.
இக்கோயிலின் வெளிச்சுவர்கள் எல்லா ஹிந்து கோயில்களையும் போன்று வெள்ளை மற்றும் காவி நிற பட்டைகளால் வண்ணம் பூசப்பட்டுள்ளன. இங்குள்ள புனித மரத்தின் மீது மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டுள்ளதை காணலாம். இந்த யந்த்ரோதாரகா ஆஞ்சநேயா கோயில் பக்தர்களுக்கு காலையும் மாலையும் திறந்து விடப் படுகிறது.