ஹரித்வாரில் அமைந்திருக்கும் நீல் பர்வத் என்னுமிடத்தில் உச்சியில் அமைந்திருக்கிறது சண்டி தேவி கோவில். 52 சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோவில் 1929க்கு முந்தைய காஷ்மீர் ஆட்சியாளரால் கட்டப்பட்டது. எனினும் இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலை ஆதி சங்கராச்சாரியாவால் நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிறது.
நாடோடிக் கதைகளின்படி ஷும்ப் மற்றும் நிஷும்பா ஆகிய அசுரர்களை கொன்றபின் இந்து தெய்வமான சந்திகா தேவி நீல் பர்வத்தில் ஓய்வெடுத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த இடத்தை ஆட்டோ, ரிக்ஷா, வாடகை கார்கள் மூலமாக பயணிகள் அடையலாம். சண்டிகாட்டில் இருக்கும் 3கிமீ நீள மலையேற்றப் பாதையின் மூலமும் சண்டிதேவி கோவிலை அடையலாம். 25நிமிட கேபிள் கார் பயணத்தின் மூலமாக சண்டிதேவி கோவிலை அடைவது சிறப்பான அனுபவத்தை தருவதாக இருக்கிறது.