ஹரித்வாரில் இருந்து 3கிமீ தொலைவில் அமைந்திருக்கும் மானசா தேவி கோவில் புகழ்பெற்ற மதஸ்தலமாகும். காஷ்யப் என்ற பழங்கால துறவி ஒருவரின் அருளால் உருவானதே மானசா தேவி கோவில்.
நாகக் கடவுளான நாக வாசுகியின் மனைவியாக மானசா தேவி வணங்கப்படுகிறார். ஷிவாலிக் மலைகளில் உள்ள பில்வா பார்வத் பகுதியின் நுனியில் அமைந்திருக்கிறது மான்சா தேவி கோவில்.
இங்கிருக்கும் மானசா தேவியின் இரண்டு சிலைகளில் ஒன்றிற்கு ஐந்து கைகளும், மூன்று வாய்களும் மற்றொன்றிற்கு எட்டு கைகளும் அமைந்துள்ளது.
52 சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோவில் சித்த பீட முக்கோணத்தின் உச்சியில் அமைந்துள்ளது. மாயாதேவி, சண்டி தேவி மற்றும் மான்சாதேவி ஆகிய மூன்று கடவுள்களும் இணைந்து அந்த முக்கோணம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இக்கோவிலில் இருக்கும் புனித மரத்தில் பக்தர்கள் கயிறுகளைக் கட்டி தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்காக வழிபடுகிறார்கள். வேண்டுதல் நிறைவேறிய பின்பு அக்கயிற்றை கழட்டிவிடுதல் அவசியம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. 'தேவி உடன்கட்டோலா' எனப்படும் கேபிள் கார் மூலமாக பயணிகள் இக்கோவிலை அடையலாம்.