பல நூற்றாண்டுகளாகவே மணிப்பூர் மற்றும் இம்பாலின் வரலாற்றில் போருக்கு எப்பொழுதுமே ஒரு முக்கியமான பங்கு உண்டு. தொடர்ந்து பல போர்களில் ஈடுபட்டிருந்த போர் முனையாக இருந்தாலும், அந்த அழிவுகளிலிருந்து வெற்றியுடன் மீண்டு வருவதே இம்பாலின் அடையாளமாகும்.
நூற்றாண்டுகளாகவே சத்தமில்லாமல் பல போர்களை சந்தித்த இந்த நகரத்தில், அதில் உயிர் நீத்த மாவீரர்களின் நினைவாகவே இந்த கல்லறைகளையும் கட்டி வைத்திருக்கிறார்கள்.
காமன்வெல்த் போர் கல்லறைகள் ஆணையத்தினால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த கல்லறைகள், இரண்டாம் உலகப்போரின் போது இந்த நிலப்பகுதியை ஜப்பானிய படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்றும் பொருட்டாக உயிர் நீத்த வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே கட்டப்பட்டிருக்கின்றன.
இம்பால்-திமாபூர் சாலையில் இம்பாலில் இருந்து 10 கிமீ தொலைவில் இந்த போர் கல்லறைகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான வீரர்கள் துயில் கொள்ளும் அந்த கல்லறைகள் கற் குறியீடுகள் அல்லது பித்தளை பலகைகளால் குறிப்பிடப்பட்டுள்ளன.
இது கல்லறை பகுதியாக இருந்தாலும் இந்த இடம் மிகவும் அமைதியாகவும், மேன்மையாகவும் இருக்கும். இந்த போர்வீரர்கள் இல்லாமல் இந்தியா இரண்டாம் உலகப்போரில் பங்கெடுத்துக் கொண்டிருக்க முடியாது என்பதை இந்த கல்லறைகள் நமக்கு நினைவு படுத்தும் விதமாக உள்ளன.