இம்பால் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் இருக்கும் மாடெய் தோட்டம், இபுதொள அஸெய்னிங்தொள என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. மாடெய் என்பது உள்ளூர் தெய்வங்களில் ஒன்றாகும் மற்றும் இபுதொள அஸெய்னிங்தொள என்ற வார்த்தையிலிருந்து இந்த வார்த்தை கிடைக்கப்பெற்றது. கிழக்கு இம்பால் மாவட்டத்தில் இருக்கும் மாடெய் என்ற இடத்தில் இந்த தோட்டம் உள்ளது.
இந்த மாடெய் தோட்டத்தின் சிறப்பம்சமான அழகாகவும் மற்றும் நன்றாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள துரண்டா (Duranta) தாவரத்தை சொல்லலாம். துரண்டா தாவரம் தான் இந்த தோட்டத்தின் பெரும்பாலன இடங்களில் அழகுற செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு முழு நாளை வெளியில் கழித்திட மிகவும் ஏற்ற இடமாக இந்த தோட்டம் உள்ளது. எங்கெங்கிலும் இருக்கும் பசுமை, மிகவும் கச்சிதமாக அமைந்திருக்கும் நில அமைப்புகள் ஆகியவை இந்த சுற்றுச்சூழலை சாந்தமாக வைத்திருக்கின்றன.
உலகத்தைப் பற்றிய எந்தவித கவலைகளும் இல்லாமல் சுற்றித்திரிய விரும்பும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் மற்றும் இயற்கை விரும்பிகளுக்கு ஆர்வமூட்டும் வகையில் பல்வேறு விதமான தாவரங்கள், புதர்கள், மரங்கள், வண்ணமயமாக பூத்துக் கிடக்கும் மலர்கள் என அனைத்தும் மாடெய் தோட்டத்தில் உள்ளன. எனவே தான், மாடெய் தோட்டம் இன்ப சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்ற இடமாக உள்ளது.