ஜின்ட் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் 8 கிமீ தொலைவில் ஜின்ட் - ஹன்ஸி சாலையில் அமைந்துள்ள ஜாட் இனத்தவரின் கிராமம் ராம்ராய் அல்லது ராம்ரே ஆகும். கோபமிக்க வீரத்துறவியான பரசுராமரால் உருவாக்கப்பட்ட குளத்தின் பெயராலேயே இந்த கிராமத்திற்கு ராம்ராதா என்ற பெயர் கிடைத்தது.
வாமன புராணத்தில், பரசுராமர் தன்னுடைய மூதாதையர்களின் ஆன்மாவை சாந்தியடையச் செய்வதற்காக, கொன்ற சத்திரியர்களின் இரத்தம் ஐந்து குளங்களில் நிரப்பப்பட்டதாகவும், அதன் மூலமே ராம்ராதா அடையாளம் காணப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த குளங்களில் இரத்தம் தண்ணீர் போல பாய்ந்து ஓடியது. எனவே, ராம்ராதா கோவிலில் உள்ள குளத்தில் நீராடினால் அது சிறப்பான மதரீதியான பலன்களைத் தரும் என நம்பப்படுகிறது.
இந்த இடத்திற்கு அருகில் பரசுராமருக்கான பழமையான கோவில் ஒன்றும் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சிலை தினமும் வழிபடப்பட்டு வருகிறது. சுற்றியுள்ள மக்களிடம் மிகவும் புகழ் பெற்ற மதத்தலமாக உள்ள பழமையான இந்த கிராமத்திற்கு திரளான சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் வருவது வழக்கம்.



Click it and Unblock the Notifications