சத்குரு ரோஹிதாஸ் என்பது ஒரு ஆசிரமம் ஆகும். இந்த ஆசிரமம் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ல ஸர்ஸாய் கிராமத்தில் உள்ளது. இந்த ஆசிரமத்தில் தான் சத்குரு ரவிதாஸ் (பின்னர் சத்குரு ரோஹிதாஸ் ஜி என அறியப்பட்டார்) தனது வாழ்வின் 15 ஆண்டுகளை கழித்தார்.
இங்கு வழங்கும் நம்பிக்கைகளின் படி இந்த ஆசிரமத்தில் ரோஹிதாஸ்ஜியின் வாழ்வில் சம்பந்தமுடைய 7 குண்டங்கள் இருந்தன. ஆனால் அவற்றில் தற்போது சுமார் 3 குண்டங்களே காணப்படுகின்றன.
சத்குரு ரோஹிதாஜி உலகளாவிய சகோதரத்துவம், சகிப்பு தன்மை மற்றும் இன்றைய உலகின் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் பல உபதேசங்களை தன்னுடைய சீடர்களுக்கு போதித்தார். அவருடைய சீடர்களில் பிபா அரசர், மீராபாய் மற்றும் ராணி ஜ்ஹல்லா போன்றோர் மிக முக்கியமானவர்கள்.