கர்மனாசா என்ற நதி கங்கை நதியின் கிளை நதியாகும். இன்னது உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் வழியாக பாய்ந்தோடுகிறது. இந்த நதியின் அர்த்தம் அதன் பெயரிலேயே அடங்கியுள்ளது; அதாவது "கர்மங்களை அழிப்பான்" என்று பொருளாகும். இந்த நதியை பற்றி பல புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன.
இந்த நதியில் இரண்டு அணைகள் கட்டப்பட்டுள்ளன. அதனை லடிப் ஷா அணை மற்றும் நுவாகர் அணை என்று அழைக்கின்றனர். கர்மனாசா நதிக்கு மேல் உள்ள பாலம் நீள் பெருஞ்சாலையாக விளங்குகிறது.
இந்த நதி பள்ளத்தாக்கில் உள்ள ராஜா நல் கா டிலா என்ற இடத்தில், பூமிக்கு அடியில் சில இரும்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் இரும்பு தயாரிப்புக்கு உள்ள வராலற்று முக்கியத்துவத்தை இது பறைசாற்றும்.