முண்டேஷ்வரி மலையில் அமைந்துள்ள முண்டேஷ்வரி கோவில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்காக கட்டப்பட்ட கோவிலாகும். இக்கோவிலில் சாஸ்திர சம்பிரதாயங்களை தினசரி தவறாமல் கடைப்பிடிப்பதால் அவைகளை கடைப்பிடிக்கும் பழைமையான கோவிகளில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.
இக்கோவிலில் விநாயகர், சூர்ய தேவர் மற்றும் விஷ்ணுவின் சிலைகளும் உள்ளது. இக்கோவில் கி.பி. 108-ஆம் கட்டப்பட்டதாக இருக்கலாம் என்று இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
1915-ஆம் ஆண்டில் இது ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டது. நகரா வகை கோவில் கட்டடகலைக்கு இக்கோவில் ஒரு பழமையான உதாரணமாகும்.
முண்டேஷ்வரி கோவிலில் ராம நவமியும் சிவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆன்மீக கொண்டாட்டங்களை கண்டு களிக்க ஒவ்வொரு வருடமும் இங்கு பல சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு.
ஒவ்வொரு வருடமும் நவராத்திரியின் போது இங்கு மிகப்பெரிய திருவிழா கொண்டாடப்படும். இதனை கண்டு களிக்கவும் இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் வருவதுண்டு.



Click it and Unblock the Notifications