பலாஸ்கும்பா எனும் இந்த கிராமம் புல்பணியிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்குள்ள பரலாதேவி கோயிலுக்கு இந்த கிராமம் பிரசித்தி பெற்றுள்ளது. இந்த பரலாதேவி தெய்வம் கந்தமால் மாவட்டத்தின் குலதெய்வமாக வணங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த கோயிலில் விசேஷமாக கொண்டாடப்படும் துசேரா திருநாளின்போது வெகு தூரத்திலிருந்தும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் திரள்கின்றனர். இரண்டு மலை ஓடைகள் சங்கமித்து பில்லசால்கி எனும் ஆறு உருவாகும் இடத்தில் இந்த பலாஸ்கும்பா கிராமம் அமைந்துள்ளது.
இதே கிராமப்பகுதியில் உள்ள பில்லசால்கி அணையும் கந்தமால் பகுதியின் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. சுற்றிலும் அற்புதமான இயற்கைச்சூழலுடன் காட்சியளிக்கும் இந்த அணைப்பகுதி பிக்னிக் சிற்றுலாவுக்கு ஏற்றதாக உள்ளது.
உள்ளூர் மக்களும் அதிக எண்ணிக்கையில் ஓய்வாக நேரத்தை கழிக்கும் நோக்கத்துடன் இந்த அணைப்பகுதிக்கு வருகின்றனர். பலாஸ்கும்பா கிராமம் நல்ல சாலைப்போக்குவரத்து வசதிகளையும் கொண்டிருக்கிறது.