புல்பணி நகரம் கந்தமால் மாவட்டத்தின் நிர்வாகத்தலைநகராக அமைந்திருக்கிறது. இந்நகரை சுற்றி பல்வேறு இயற்கை எழில் அம்சங்கள் நிறைந்துள்ளன. கன்னிமை கெடாத வனப்பகுதிகள், உயர்ந்தோங்கி நிற்கும் மலைகள் மற்றும் செழிப்பான தாவர வளம், காட்டுயிர் வளம் போன்றவற்றை இது பெற்றிருக்கிறது.
சிறிதும் பெரிதுமான பல நீர்வீழ்ச்சிகளையும் இந்த புல்பணி கொண்டுள்ளது. என்றுமே வற்றாத சலுங்கி ஆறு இப்பகுதியின் காடுகள் வழியே பாய்வதோடு பல நீர்வீழ்ச்சிகளையும் தனது பாதையில் உருவாக்கிச்செல்கிறது.
இந்த ஆற்றில் கட்டப்பட்டிருக்கும் ‘பிலாசுலுகி எனும் அணை இயற்கை எழில் அம்சங்களால் சூழப்பட்டிருப்பதால் ஒரு முக்கியமான பிக்னிக் ஸ்தலமாக பிரசித்தமடைந்துள்ளது.
இப்பகுதியில் வசிக்கும் பூர்வகுடி மக்கள் சலுங்கி ஆற்றோடு தொடர்புடைய பல அமானுஷ்ய கதைகளை கூறுவது மற்றொரு சுவராசிய அம்சம். இயற்கை ரசிகர்கள் இந்த இடத்தின் அழகை தரிசிப்பதற்கு ஏராளமான எண்ணிக்கையில் வருகை தருகின்றனர்.
புல்பணி நகரத்துக்கு பயணம் செய்யும் வழியிலேயே இருபுறமும் அழகிய மலைக்காட்சிகளையும், வனப்பகுதியையும் பார்த்து ரசிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications