இச்சிறு மண்டபம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற அமைதியான சிறு கிராமத்தில் பிறந்த தமிழ்க் கவிஞர் கவியரசர் கண்ணதாசனுக்காகக் கட்டப்பட்ட்தாகும்.
கண்ணதாசன் அவர்கள், தன் புரட்சிக் கருத்துக்களால், தமிழ் இலக்கியத்தின் முகத்தை மற்றியமைத்தவர் என்ற புகழுக்குரியவர். இவருக்கு மக்களை கட்டிப்போட்டு வைக்கக் கூடிய சிறப்பான பேச்சாற்றலும் இருந்த்து.
தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமல்லாது, தமிழ் திரையுலகுக்கும், மிகப் பிரபலமான பல பாடல்களைத் தந்து பங்காற்றியுள்ளார். பல பத்திரிக்கைகளிலும், இவரது அரசியல் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன.
இவரது எழுத்துக்கள் தமிழ்நாட்டில் தனி முத்திரை பதித்தன; ஏனெனில், அதுவரை தமிழர்கள் எதற்கும் குரல் கொடுக்க முன்வராத நிலையை இவர் எழுத்துக்கள் தகர்த்தெறிந்து, அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவனவாக இருந்தன. அவர் தன் படைப்புகளில், பொதுமக்களின் பிரச்சினைகள், பயங்கள் மற்றும் சந்தோஷங்களைப் பற்றியே பெரும்பாலும் எழுதினார்.
நகரத்தார்கள், தங்கள் சாதியை நாடெங்கிலும் அறியச் செய்த கவியரசரை பெருமைபடுத்தும் வகையில் இம்மண்டபத்தைக் கட்டியுள்ளனர்.