இக்கோயில், காரைக்குடி நகரின் மத்தியில் அமைந்துள்ளதனால், இது இங்கு வருவோரின் கண்பார்வையில் கட்டாயம் படும். இக்கோயில், சிவன் மற்றும் விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்டதாகும்.
பெருமாளை “திருமால்” என்றும் உள்ளூர் வாசிகள் குறிப்பிடுகின்றனர். பெருமாள், விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராவர். இந்துப் புராணங்களின் படி, மஹாவிஷ்ணு தான் இவ்வுலகு நிலை பெற்றிருப்பதற்கு அருள் புரிகிறார் என்றும், சிவன் அழிவுகளை உண்டாக்கும் கடவுள் என்றும் நம்பப்படுகிறது.
இவர்கள் இருவரோடு இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய கடவுளான பிரம்மாவையும் சேர்த்து, மும்மூர்த்திகளாக இந்துக்கள் இம்மூவரையும் வணங்கி வருகின்றனர்.
இவ்விரு கடவுள்களும் மாறுவேடத்தில் பூமிக்கு வந்ததாகவும், அவ்வாறு மேலோகத்திலிருந்து இங்கு வரும் போது இக்கோயிலை தங்கள் பூலோக இருப்பிடமாகக் கொண்டனர் என்றும் உள்ளூரில் நம்பிக்கை உலவுகிறது.
ஆச்சரியமாக, இவ்விருவரின் துணைவியரான பார்வதி தேவி மற்றும் லஷ்மி ஆகியோரின் திருவுருவச் சிலைகள் நிறுவப்படவில்லை.



Click it and Unblock the Notifications