ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை நினைவுறுத்தும் வகையில் தாஜ் மஹாலை ஒத்த தோற்றத்துடன் இந்த விக்டோரியா மெமோரியல் அமைந்துள்ளது. 1921ம் ஆண்டு பொது மக்களுக்கு திறந்துவிடப்பட்ட இந்த மாளிகையில் பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தினரின் சில அரிய புகைப்படங்கள் காணப்படுகின்றன.
அற்புதமான கட்டிடக்கலை அம்சத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த மாளிகையை பார்த்து ரசிப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். ரம்மியமான புல்வெளி வளாகத்தை கொண்டிருப்பதால் ஒரு முக்கியமான பொழுதுபோக்கு ஸ்தலமாக இது பயணிகளை ஈர்க்கிறது.



Click it and Unblock the Notifications