மன்ரோ துருத் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த மன்ரோ தீவுப்பகுதி எட்டு குட்டி தீவுகளை உள்ளடக்கியுள்ளது. கொல்லம் நகரிலிருந்து 27 கி.மீ தூரத்திலுள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் இப்பகுதியின் வளர்ச்சிக்கு வித்திட்ட கர்னல் ஜான் மன்ரோ என்ற அதிகாரியின் பெயரால் இத்தீவுப்பகுதி அழைக்கப்படுகிறது. பலவித கால்வாய்களை உருவாக்கியது மற்றும் நீர்வழிப்பாதைகளை இணைத்து போக்குவரத்துப் பாதைகளை உருவாக்கியது போன்ற பல பயனுள்ள மாற்றங்களை அவர் அக்காலத்திலேயே இந்தத் தீவுப்பகுதியில் நிகழ்த்தியுள்ளார்.
இன்று மன்ரோ தீவுப்பகுதியானது அதிகமான சுற்றுலாப்பயணிகளால் விரும்பப்படும் ஒரு ரம்மியமான சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது. மூலசந்தாரா கோயில் மற்றும் கல்லுவிலா கோயில் என்ற இரண்டு கோயில்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன. 1878ம் ஆண்டில் கட்டப்பட்ட பள்ளியம் துருத் எனும் புராதன தேவாலயமும் தன் அமைதி தவழும் அழகால் பார்வையாளர்களை ஈர்க்கிறது.
அஷ்டமுடி நீர்த்தேக்கம் கல்லடா ஆற்றோடு சங்கமிக்கும் இடத்தில் இந்த தீவுப்பகுதி அமைந்துள்ளது. விடுமுறைச்சுற்றுலாவுக்கு மிகவும் ஏற்ற இந்த தீவுஸ்தலத்தில் பறவை வேடிக்கை, மீன்படித்தல் மற்றும் இயற்கைக்காட்சி ரசிப்பு போன்ற பொழுது போக்குகளில் பயணிகள் ஈடுபடலாம்.
இவை தவிர தென்னை நார் தொழில் இப்பகுதியில் பிரதானமாக காணப்படுவதால் அது தொடர்பான நார்த்தயாரிப்பு நுணுக்கங்களை நேரில் பார்த்து ரசிக்கலாம்.