கொல்லம் நகரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள இந்த திருமுல்லாவரம் பீச் எனும் கடற்கரைப்பகுதியானது அழகிய மணற்பிரதேசத்துடன் வணிக ஆரவாரங்களால் பாதிப்படையாமல் காட்சியளிக்கிறது.
ஆழம் குறைந்த நீர்ப்பகுதி என்பதால் பயமில்லாமல் பயணிகள் குழந்தைகளுடன் இந்த கடற்கரையில் நீந்திக்குளித்தும் மகிழலாம். மொத்தத்தில், சுற்றுலாப்பயணிகள் குடும்ப உறுப்பினர்களுடன் இயற்கையை ரசித்தபடி மகிழ்ச்சியாக பொழுதுபோக்க இது மிகவும் உகந்ததாக உள்ளது.
நகரச்சந்தடியிலிருந்து விலகியிருப்பதால் இது அமைதியை விரும்பும் மனங்களுக்கு இது பிடித்தமான ஸ்தலமாக திகழ்கிறது. அருகிலேயே உள்ள ஒரு விஷ்ணுக்கோயிலின் பெயரால் இந்த கடற்கரை அழைக்கப்படுகிறது என்பது ஒரு உபதகவலாகும்.
தவிர, இங்குள்ள ‘நியாரழ்ச்ச பாறா’ எனும் ஒரு பாறை அமைப்பும் பிரசித்தமான அம்சமாக அறியப்படுகிறது. இந்த பாறையானது கடற்கரையிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் கடலில் அமைந்துள்ளது.
அலையிறக்க காலத்தில் நீர் மட்டம் உள்வாங்கும்போது இந்த பாறை அமைப்பை காண முடியும். மாலை நேரம் இந்த கடற்கரையை சுற்றிப்பார்த்து ரசிக்க உகந்ததாக உள்ளது. மழைக்காலம் தவிர்த்து வருடத்தின் மற்ற எல்லா நாட்களிலும் திருமுல்லாவரம் கடற்கரைக்கு விஜயம் செய்து ரசிக்கலாம்.