கொல்லம் நகரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் இந்த நீண்டகரா துறைமுகம் என்றழைக்கப்படும் முக்கியமான கடற்துறைமுகம் மற்றும் மீன்பிடி துறை அமைந்துள்ளது. ‘இந்தோ நார்வீஜியன் ஃபிஷரீஸ் கம்யூனிட்டி ப்ராஜக்ட்’ எனும் திட்டத்தின் தலைமையகமாக விளங்கும் இந்த இடம் இப்பிரதேசத்தின் மீன்பிடித்தொழில் மற்றும் கடல்சார் செயல்பாடுகளுக்கான கேந்திரமாக இயங்குகிறது.
இத்திட்டம் இப்பகுதியிலுள்ள மீனவ சமூகத்தினரின் வளர்ச்சிக்கும் மீன்பிடி தொழில் விருத்திக்கும் மிகப்பெரிய அளவில் உதவியுள்ளது. மீன்பிடி பயிற்சி மையம், சக்திக்குளங்கராவில் ஒரு படகுக்கட்டுமான தள நிர்மாணம் மற்றும் ஒரு குளிர்பதன சேகரிப்பு நிலையம் போன்றவை இத்திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நீண்டகரா துறைமுகத்தில் உள்ள மீன்பிடித்துறையில் ஒரே சமயத்தில் 500 மீன் பிடி படகுகளை நிறுத்தும் அளவுக்கு பிரம்மாண்ட இடவசதி உள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
துறைமுகத்தை சுற்றிலும் நிரம்பியுள்ள ரம்மியமான இயற்கை காட்சிகளை ரசிப்பதோடு மட்டுமல்லாமல், அஷ்டமுகி நீர்த்தேக்கம் இப்பகுதியில் அரபிக்கடலில் கலக்கும் அற்புத காட்சியையும் பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications