தர்ராஹ் காட்டுயிர் சரணாலயம் 1955ம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளது. முற்காலத்தில் இந்த வனப்பகுதி கோட்டா மன்னர்களின் வேட்டைஸ்தலமாக திகழ்ந்துள்ளது. இங்கு காண்டாமிருகங்கள், மான்கள் மற்றும் புலிகள் ஆகிய விலங்குகள் வசித்துள்ளன.
தற்சமயம் இந்த தர்ராஹ் காட்டுயிர் சரணாலயம் பல வகை விலங்குகளின் இருப்பிடமாக உள்ளது. கரடிகள், மான்கள்,கலைமான்கள், சிறுத்தைகள் மற்றும் நில்கை மான்கள் வசிக்கின்றன. குறிப்பாக ஒநாய்கள் மற்றும் கலைமான்களை இங்கு அதிக அளவில் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications