குக்கே சுப்ரமண்யா கோயிலுக்கு அருகிலேயே இந்த ஆதி சுப்ரமண்யா கோயிலும் அமைந்துள்ளது. வால்மீகா எனும் புற்று இந்தக்கோயிலின் கருவறையிலேயே காணப்படுகிறது.
மிகப் புராதனமான இந்த புற்று வடிவங்கள் ஆதிசேஷன் மற்றும் வாசுகி என்று வணங்கப்படுகின்றன. மேலும் இக்கோயிலைச் சுற்றிலும் பசுமையான காடுகளும் மலைஅருவிகளும் காணப்படுகின்றன.புராணக்கதைகளின்படி ஆக்கக்கடவுளாகிய பிரம்மா பஹவான் இந்த ஸ்தலத்தில் தன் உறைவிடத்தை அமைக்க சுப்ரமணியக்கடவுளிடம் அனுமதி வேண்டியதாக சொல்லப்படுகிறது. பிரம்மா பஹவான் உறையும் இடமாக விளங்கிய இக்கோயில் யமனின் சாபத்திற்கு பின்னர் தன் பொலிவை இழந்ததாக ஐதீகம் நிலவுகிறது.
இங்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு மிரித்திகா எனப்படும் புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது தோல் வியாதிகளை தீர்க்கும் அபூர்வ சக்தி கொண்டதாக நம்பப்படுகிறது.