போர் நினைவு சின்னம் ட்ரெண்ட்டை சேர்ந்த அப்போதைய இந்திய தலைமை கமாண்டரன `லார்ட் ராவ்லின்ஷன்' என்பவரால் 1923 ம் ஆண்டு நவம்பர் 11 ம் தேதி நிறுவப்பட்டது.
கார்வாலி உணவகம் 1888 இல் பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட பழமையான கட்டிடங்களில் ஒன்று. கார்வாலி உணவகம் தற்போது ஆசியாவின் மிக முக்கியமான அருங்காட்சியமாக திகழ்கிறது.
புல்லா டால், லாண்ஸ்டவுனில் உள்ள மற்றொரு முக்கியமான இடமாகும். இது கர்வால் ரைஃபிள்ஸின் இளம் வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட அழகான செயற்கை ஏரி. இந்த ஏரியின் பெயரான புல்லா என்பது ஒரு கார்வாலி வார்த்தையாகும்.
ராயல் பொறியாளரான கலோனல்` A.H.B. ஹியூம்' என்பவரால் 1895 ல் கட்டப்பட்ட `செயின்ட் மேரி' தேவாலயம் மற்றுமொறு குறிப்பிடத்தக்க சுற்றுலா மையம் ஆகும். 1947 இல் கைவிடப்பட்ட இத்தேவாலயத்தை , கர்வால் ரைஃபிள் ராணுவ மையம் புதுபித்துக் கட்டியது.
இங்கு சுதந்திர காலத்திற்கு முந்தய இந்தியாவின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ராணுவ அருங்காட்சியகம், துர்கா தேவி கோவில், புனித ஜான் சர்ச், ஹவாகர், மற்றும் டிப்-ன்-டாப் ஆகியன குறிப்பிடத்தக்க சுற்றுலா மையங்கள் ஆகும்.
சாகசத்தை விரும்பும் பயணிகள் மலையில் ட்ரெக்கிங் செய்தும், காடுகளில் உலவியும் மகிழலாம். இங்கே உள்ள `காதலர்களின் பாதை' தலைசிறந்த மலைப்பாதையாக கருதப்படுகிறது. இப்பாதையில் ட்ரெக்கிங் செய்வது நமக்கு நம்பமுடியாத அனுபவத்தை தருகிறது.
இப்பகுதியில் உள்ள பச்சைப்பசேல் காடுகள், பலவகையான தனித்தன்மை வாய்ந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் நிரம்பியுள்ளது. சுற்றுலா பயணிகள் இங்கு உள்ள அழகான காடுகளில் உலவி வரலாம்.
இங்கு உள்ள பல சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள், மிகக் குறைந்த செலவில் ட்ரெக்கிங் மற்றும் சஃபாரி முதலியவற்றை ஏற்பாடு செய்து தருகின்றனர்.
லாண்ஸ்டவுனை விமானம், ரயில், மற்றும் சாலை மார்கமாக எளிதில் அணுகலாம். டேராடூனில் அமைந்துள்ள `ஜாலி கிராண்ட்' விமான நிலையம் லாண்ஸ்டவுனுக்கு அருகில் உள்ள விமான நிலையம் ஆகும்.
கோட்வாரா ரயில் நிலையம் லாண்ஸ்டவுனுக்கு மிக அருகில் உள்ளது. மார்ச் முதல் நவம்பர் வரை உள்ள 9 மாதங்கள் லாண்ஸ்டவுனை சுற்றி பார்ப்பதற்கு மிகவும் உகந்த பருவமாகும். அச்சமயங்களில் இப்பகுதியில் சாதகமான சூழ்நிலை நிலவும்.



Click it and Unblock the Notifications