மதுரை மாநகரிலிருந்து 48 கி.மீ தூரத்தில் இந்த அருப்புக்கோட்டை நகரம் அமைந்துள்ளது. மல்லிகைப்பூ தோட்டங்கள், பழமையான கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்கு இந்நகரம் புகழ் பெற்றுள்ளது.
நல்லிர் முஹைதீன் ஆண்டவர் மஸ்ஜித், வாழவந்தபுரம் ஜும்மா பள்ளிவாசல், தௌகீத் ஜமாத் பள்ளிவாசல், ஸ்ரீ அருள்மிகு சொக்கநாதர் ஸ்வாமி கோயில், அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், சி.எஸ்.ஐ தேவாலயம் போன்ற முக்கியமான ஆன்மீக அம்சங்கள் இங்கு நிறைந்துள்ளன.
ஒரு யாத்திரைஸ்தலமாக மட்டுமல்லாது முக்கியமான தொழில் நகரமாகவும் இந்த அருப்புக்கோட்டை திகழ்கிறது. மதுரையை மற்ற நகரங்களுடன் இணைக்கும் நகரமாகவும் இது அமைந்திருக்கிறது. மதுரைக்கு விஜயம் செய்யும் பயணிகள் அருப்புக்கோட்டைக்கும் ஒரு நடை செல்வது பயணத்தை பூர்த்தி செய்வதாக அமையும்.