31.8 ச.கி.மீ கொண்ட சிறிய பரப்பளவில் அமைந்துள்ள மணாலி காட்டுயிர் சரணாலயம் மணாலியில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது.
1933ம் ஆண்டுக்குரிய பஞ்சாப் பறவைகள் மற்றும் காட்டுவிலங்குகள் சட்டத்தின்கீழ் 1954ம் ஆண்டில் ஃபிப்ரவரி 26ம் தேதி இது ஒரு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இங்கு பல அரிய மற்றும் அருகி வரும் விலங்குகள், ஊர்வன, பாலூட்டிகள் மற்றும் பறவைகள் வசிக்கின்றன.
இருப்பினும் பார்வையாளர்கள் குரைக்கும் மான், காஷ்மீர் பறக்கும் அணில், ஹிமாலயன் கருங்கரடி, ராட்சத வௌவால், மஞ்சள் தொண்டை மார்ட்டென் கரடி, ஹிமாலயன் புனுகுப்பூனை, வரிக்கழுதைப்புலி, சிறுத்தை மற்றும் பழுப்புக்கரடி போன்ற இதர விலங்குகளையும் இங்கு பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications