பங்க்னா - கர்சோக் வாலி எனப்படும் இந்த பள்ளத்தாக்குப்பகுதி இங்குள்ள ஒரு கோட்டைக்காக பிரசித்தி பெற்றுள்ளது. ஏழு அடுக்குகளை கொண்ட இந்த கோட்டை கற்களாலும் மரத்தாலும் கட்டப்பட்டிருக்கிறது. ஏராளமான யாத்ரீகர்கள் ஒவ்வொரு வருடமும் விஜயம் செய்யும் மஹாமயா கோயில் இந்த கோட்டைக்குள் அமைந்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 350 மீ உயரத்தில் வீற்றுள்ள கர்சோக் நகரம் மண்டி மாவட்டத்தின் துணைமண்டல தலைநகரமுமாகவும் திகழ்கிறது. வழங்கி வரும் புராணக்கதையின்படி பாண்டவ சகோதர்களுள் ஒருவரான பீமன் தன் மனைவி ஹிடிம்பாவை இந்த ஸ்தலத்தில் மணம் செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.
ஒரு கிண்ணம் போன்ற காட்சியளிக்கும் இந்த பள்ளத்தாக்குப்பகுதியை சுற்றிலும் பல ஆப்பிள் தோட்டங்களும் அமைந்து ரம்மியமான இயற்கை அழகுடன் இந்த பிரதேசம் ஜொலிக்கிறது.
காமாக்ஷி தேவி கோயில், மாம்லேஷ்வர் மஹாதேவ் கோயில் மற்றும் மஹுனாக் கோயில் போன்ற முக்கியமான கோயில்களும் இந்த பகுதியின் அழகைக்கூட்டுவதாக அமைந்துள்ளன.
டிரக்கிங் எனப்படும் மலையேற்றத்தில் ஈடுபட விரும்பி பெரும்பாலும் இங்கு பயணிகள் விஜயம் செய்கின்றனர். ஏப்ரல் மற்றும் அக்டோபருக்கு இடைப்பட்ட பருவம் இப்பகுதிக்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாகும்.



Click it and Unblock the Notifications