வைணவ ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 திவ்ய தேசத்தலங்களில் ஒன்றாக காவிரி நதிக்கரையில் உள்ள ஸ்ரீ பரிமளா இரங்கநாதசுவாமி கோவில் உள்ளது. பச்சைக் கல்லில் 12 அடி உயரத்தில் உள்ள ஸ்ரீ பரிமளா இரங்கநாதசுவாமியானவர் மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவராவார்.
இவரின் துணைவியாரான பரிமளா இரங்கநாயகி சந்திர-சாப-விமோசானவல்லி மற்றும் புன்டரிகாவளி என்றும் அழைக்கப்படுகிறார். இந்த பெண் தெய்வமானவர், சந்திரரின் சாபத்திற்கு விமோசனம் அளித்ததால் அவர் சந்திர-சாப-விமோசனவல்லி என்று அழைக்கப்படுவதாக புராணக்கதைகளில் சொல்லப்பட்டுள்ளது.
பஞ்ச இரங்க ஷேத்ரம் என்ற புனிதப் பயண வளையத்திற்குள் வருவதன் காரணமாகவும் இந்த கோவில் முக்கியத்துவம் பெறுகிறது.
ஸ்ரீ இரங்கபட்டிணத்திலிருக்கும் ஸ்ரீஇரங்கநாதசுவாமி கோவிலில் தொடங்கி காவிரி நதியின் போக்கில் செல்லும் போது ஸ்ரீரங்கம் ஸ்ரீ இரங்கநாதசுவாமி கோவில், கும்பகோணம் சாரங்கபாணி கோவில், திருச்சி ஆப்பக்குடத்தான் கோவில் மற்றும் இறுதியாக மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீ பரிமளா இரங்கநாதசுவாமி கோவில் ஆகியவற்றை வரிசையாக தரிசிக்க முடியும்.



Click it and Unblock the Notifications