மேடக் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மேடக் கோட்டை ஆந்திர தலைநகரம் ஹைதராபாத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோட்டையை 12-ஆம் நூற்றாண்டில் காகதீய பேரரசர் பிரதாப ருத்ரா என்பவர் மேடக் நகரை படையெடுப்பிலிருந்து பாதுகாக்க வேண்டி நகரை சுற்றி ஒரு குன்றின் மீது கட்டியுள்ளார். இதற்கு அவர் இட்ட பெயர் மேதுகுர்துர்காம் என்றாலும் உள்ளூர் மக்கள் இக்கோட்டையை மேதுகுசீமா என்றே அழைத்து வருகின்றனர்.
மேடக் கோட்டை காகதீயர்கள் மற்றும் குதுப் ஷாஹி காலகட்டத்தில் அதிகாரமிக்க பகுதியாக திகழ்ந்து வந்தது. இங்கு 17-ஆம் நூற்றாண்டில் கோட்டை வளாகத்துக்குள்ளேயே குதுப் ஷாஹி ஆட்சியாளர்கள் மசூதி ஒன்றை கட்டியுள்ளனர்.
இந்தக் கோட்டையில் தற்போது அந்த 17-ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த மிகப்பெரிய பீரங்கி ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் வரலாற்றுச் சிறப்பு மட்டுமின்றி தொல்பொருள் முக்கியத்துவத்தையும் மேடக் கோட்டை பெற்றிருப்பதால் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்தோடு வந்து செல்கின்றனர்.