ஆதார் தேவி கோயிலின் படிக்கட்டுகளில் அமைந்திருக்கும் இந்த தூத் பாவ்ரி எனும் புனிதக்கிணறு மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்திலுள்ள முக்கியமான ஆன்மீக அம்சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த கிணற்றின் நீர் பால் போன்ற நிறத்தைக் கொண்டிருப்பதால் இது பால்கிணறு என்ற பொருள்படும் தூத் பாவ்ரி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
இந்த கிணற்றின் நீர் வெண்ணிறமாக காணப்படுவது குறித்து பல கதைகள் சொல்லப்படுகின்றன. ஒருகாலத்தில் இந்த கிணறு கடவுள்களுக்கு பால் வழங்கிய ஆதாரமாக இருந்ததாக புராணிக நம்பிக்கை நிலவுகிறது.
உள்ளூர் மக்கள் இந்தக் கிணற்றை புனிதமான அம்சமாக கருதுகின்றனர். இந்த கிணற்று நீருக்கு தெய்வீக சக்தி உள்ளதாகவும் அவர்கள் நம்புகின்றனர். மேலும், இந்தக்கிணறு பசுக்கடவுளான காமதேனுவைக் குறிப்பதாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.