நாக்பூர் அருகில் விதர்பா பிரதேசத்தில் காணப்படும் இந்த அணைக்கட்டு அருகில் உள்ள கானகப்பகுதி எல்லோராலும் விரும்பப்படும் கானகப்பகுதியாகும். இங்குள்ள அணை கட்டப்படுவதற்கு கொலு படேல் கோஹ்லி என்பவர் மூல காரணமாக இருந்தார் என்று கூறப்படுகிறது.
ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த அணைக்கட்டு அருகில் டாக்டர் சலீம் அலி பெயரில் பிரசித்தி பெற்ற பறவைகள் சரணாலயமும் வனவிலங்குப் பூங்காவும் உள்ளது. இங்கு கரடி மற்றும் புள்ளி மான்கள் போன்றவற்றை காணலாம்.
இந்த அணைக்கட்டு அருகில் ரிசார்ட் ஒன்றும் உள்ளது. பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் ஒரு குழந்தைகள் பூங்கா ஆகியவற்றை கொண்ட இந்த ரிசார்ட் அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக உள்ளது.